செக்கச்சிவந்த பிஞ்சுக்கால்கள். அன்றே கொய்த செர்ரிப்பழமாய் கன்னங்கள். லேசாய் நீர் கோர்த்த, அனைத்தையும் ஊடுருவிப்பார்க்கும் கருநீலக் கண்கள். உதட்டில் எப்போதும் புன்னகையோடு ஆசையாசையாய் பார்க்கவைக்கும் நிர்மல முகம். இவையே emaivasthitha என்ற தேவதையின் அங்க அடையாளங்கள்.
எப்போதும் அழாது, எங்கேயும் விழாது அவள் செய்யும் ஒவ்வொரு அசைவும் அற்புதம். இனி இவள் கொஞ்சம் கொஞ்சமாய் வளர்வாள். தத்தி தத்தி நடப்பாள். திக்கித்திணறி பேசுவாள். அவள் அம்மாவை போலவே நடனமும் ஆடுவாள். செல் போனில் கதையலப்பாள். சில்மிஷமும் செய்வாள்.
ஒரு ஒன்பது மாதக்குழந்தையின் உலகம் மிகவும் ரசனை மிகுந்தது. அதனுள் அன்பை தவிர வேறில்லை. இத்தேவதை அன்பின் சாரத்திலேயே வளர பெருமாளை பிரார்த்திக்கிறேன்.
Sunday, January 2, 2011
Subscribe to:
Posts (Atom)