The greatest thing you'll ever learn is just to love and be love in return.

eden ahbez, 'Nature boy' (1948)


Saturday, August 14, 2010

stallone's first movie

stallone in 1983  
sylvester stallone - இன் சமீபத்திய ஆங்கிலப்படத்தின் சில காட்சிகளை நேற்று பார்த்தேன். அப்போது, அவரை பற்றி படித்த சில விஷயங்கள் நினைவுக்கு வந்தன. அவர் முன்னொரு காலத்தில்,  நம்முடைய கோடம்பாக்கத்து கலாச்சாரத்தின்படியே, ஹாலிவுட்டில் ஒவ்வொரு  உப்புமா கம்பெனியிலும் ஏறி இறங்கி  சான்ஸ் தேடிக்கொண்டு இருந்தார். அச்சமயத்தில் அவருக்கு கடுமையான பண நெருக்கடி.  தங்கிஇருக்கும் விடுதியின் வாடகை கொடுக்க முடியவில்லை. அதனால் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டார். நம்புங்கள். அவருக்கு உதவ யாரும் இல்லை. இரவில் பஸ் ஸ்டாண்டில் படுத்து தூங்கி சில நாட்களை கழித்தார். அப்போது, அவருக்கு xxx படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்தது. இருநூறு டாலர்களை பெற்றுக்கொண்டு அந்த படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்த படத்தின் பெயர் "The party at kitty and stud's"  முழுக்க முழுக்க படு ஆபாசமான அந்த படத்தில் நடித்தது பற்றி stallone இப்படி வேதனையோடு சொல்கிறார். "எனக்கு அப்போது இரண்டு வழிகள் மட்டுமே இருந்தன. ஒன்று, நான் அந்த மோசமான படத்தில் நடித்து, சம்பளமாக இருநூறு டாலர்கள் பெற்று, எனது பழைய விடுதியிலேயே குடியேறுவது, இரண்டாவது, நியூ யோர்க்கின் புறநகர் பகுதிகளில் கத்தி முனையில் வழிப்பறி செய்வது. நான் முதலாம் வழியை தேர்ந்தெடுத்தேன்,".
இது எப்படி இருக்கு?

Friday, August 13, 2010

the unscrupulous foolish soldiers

ஹாலிவுட் படங்களில் வரும் அதிபுத்திசாலியான ஹீரோக்கள் அல்ல இவர்கள்.
பெரும்பாலான ஆங்கில படங்களில் வரும் மனிதநேயம் மிக்க கதாநாயகர்களும் அல்ல. இவர்கள் அடிமுட்டாள்கள். உலகைக் காக்க வந்த ரட்சகர்கள் இவர்கள். அமெரிக்க ராணுவ வீரர்கள். சாதாரண
காமெராவை A K 47 என்று அப்பாச்சி எனப்படும் அதிநவீன ஹெலிகோப்டேரில் பறந்துகொண்டே  கண்டுபிடிக்கும் அறிவாளிகள்.  இவர்களின்  அட்டுழியங்களை இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கலாம். shaanhindu@gmail.com

Wednesday, August 11, 2010

the extraordinary author from kerala

 வைக்கம்  முஹம்மத் பஷீரின்   "உப்புபுப்பாக்கொரு ஆன இருந்தது" குறுநாவல் வாசிக்க எனக்கு  சென்றவாரம் வாய்ப்பு கிடைத்தது. மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்த குளச்சல் எம் யூசுப், பஷீரை ஒரு மாயஜால எழுத்தாளர் என்று குறிப்பிடுகிறார். அவர் கூறியது சத்தியமான உண்மை என்பது அச்சிறுநாவலை படிக்கும்போது எனக்கு தோன்றியது.
ஒரு கதையின் மாந்தர்களை ஒருசில வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட, அழகான கட்டமைப்புடன் கூடிய, ஒரே ஒரு வாக்கியத்தின் மூலம் முழுமையாக வாசகர்களுக்கு புரியவைக்க முடியுமா?  இதனை தனது மாயஜால எழுத்தின் மூலம் பஷீர் சாத்திருக்கிறார். அவரது சின்னஞ்சிறு வசனவரிகளில் காணப்படும் வலிமை, மற்ற படைப்பாளிகளின் பலப் பக்கங்களுக்கு நிகரானது. ரசனையுள்ள ஒரு வாசகன், இக்கதையை படிக்கும்போது, கதாபத்திரங்களின் ஊடே,  உலகின் பல பரிமாணங்களை கண்டறிகிறான்.
வெகுளியான, உலகத்தின் எந்த ஒரு ஜீவராசிக்கும் தீங்கு நினைக்காத ஒரு குஞ்சு பாத்திம்மாவ்வை இனி யாரால் படைக்க முடியும்? இஸ்லாமிய கலாசாரத்தின் பொருள் பொதிந்த பக்கங்கள் இவரது படைப்பின் மூலமாக மேலும் பொலிவு பெறுகின்றன. கடந்த கால வளமையின் பிரதாபம் மக்களை எந்த அளவுக்கு இம்சிக்கிறது என்பதை இக்கதையில் கண்கூடாக காண முடிகிறது.
வைக்கம் முஹம்மது பஷீரின் மிகச்சிறந்த படைப்புக்களில் இதுவும் ஒன்று. இதை வாசிக்க வாய்ப்பு கிடைத்தோருக்கு, எழுத்துலகின் புதிய பரிணாமம் நிச்சயம் புரிபடும். ஆகவே, வாய்ப்பை ஏற்படுத்திகொள்ளுங்கள்.