வைக்கம் முஹம்மத் பஷீரின் "உப்புபுப்பாக்கொரு ஆன இருந்தது" குறுநாவல் வாசிக்க எனக்கு சென்றவாரம் வாய்ப்பு கிடைத்தது. மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்த குளச்சல் எம் யூசுப், பஷீரை ஒரு மாயஜால எழுத்தாளர் என்று குறிப்பிடுகிறார். அவர் கூறியது சத்தியமான உண்மை என்பது அச்சிறுநாவலை படிக்கும்போது எனக்கு தோன்றியது.
ஒரு கதையின் மாந்தர்களை ஒருசில வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட, அழகான கட்டமைப்புடன் கூடிய, ஒரே ஒரு வாக்கியத்தின் மூலம் முழுமையாக வாசகர்களுக்கு புரியவைக்க முடியுமா? இதனை தனது மாயஜால எழுத்தின் மூலம் பஷீர் சாத்திருக்கிறார். அவரது சின்னஞ்சிறு வசனவரிகளில் காணப்படும் வலிமை, மற்ற படைப்பாளிகளின் பலப் பக்கங்களுக்கு நிகரானது. ரசனையுள்ள ஒரு வாசகன், இக்கதையை படிக்கும்போது, கதாபத்திரங்களின் ஊடே, உலகின் பல பரிமாணங்களை கண்டறிகிறான்.
வெகுளியான, உலகத்தின் எந்த ஒரு ஜீவராசிக்கும் தீங்கு நினைக்காத ஒரு குஞ்சு பாத்திம்மாவ்வை இனி யாரால் படைக்க முடியும்? இஸ்லாமிய கலாசாரத்தின் பொருள் பொதிந்த பக்கங்கள் இவரது படைப்பின் மூலமாக மேலும் பொலிவு பெறுகின்றன. கடந்த கால வளமையின் பிரதாபம் மக்களை எந்த அளவுக்கு இம்சிக்கிறது என்பதை இக்கதையில் கண்கூடாக காண முடிகிறது.
வைக்கம் முஹம்மது பஷீரின் மிகச்சிறந்த படைப்புக்களில் இதுவும் ஒன்று. இதை வாசிக்க வாய்ப்பு கிடைத்தோருக்கு, எழுத்துலகின் புதிய பரிணாமம் நிச்சயம் புரிபடும். ஆகவே, வாய்ப்பை ஏற்படுத்திகொள்ளுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment