சென்னையில் என் புதிய வாழ்க்கை
நான் ஒரு அதிர்ஷ்ட சாலி என்பதில் எனக்கு எப்போதும் சந்தேகம் இருந்ததில்லை. அது மீண்டும் உறுதி பட்டு இருக்கிறது. என் மனதில், கற்பனையில் இருந்த அதே வாழ்க்கை முறை இப்போது நனவாகி இருக்கிறது. கண்ணும் கருத்துமாய் என்னை கவனிக்கும் மனைவி, ரசனையுடன் சமையலை ருசியாக சமைக்க தெரிந்த மாமியார், காமெடியில் கலக்கும்(!!!) மாமனார் என எனது தற்போதைய வாழ்வு சுவராஸ்யம் மிகுந்தது.
புதிய மற்றும் தன்னம்பிக்கை நிரம்பிய எண்ணங்கள் என் மனதை தற்போது ஆட்கொண்டுள்ளன. இந்த ஆரம்பம் எனக்கு முக்கியமானது. நான் இதை பயன்படுத்தியாக வேண்டும். தளைகளில் இருந்து மீண்டு வர வேண்டும். நடந்திருப்பது மிகவும் நல்லது. கடவுளுக்கு எனது நன்றி.
No comments:
Post a Comment