அழகாய் ரம்மியமாய் இருக்கிறது அண்ணா நூற்றாண்டு நூலகம். எட்டு மாடியில் உலகத்தரம் என்று அடிக்கடி சொல்வார்களே, அந்த தரத்தில் அருமையாய் காட்சி அளிக்கிறது. முழுவதும் குளிர்ரூட்டபட்ட இம்மாளிகையில் உயர்தரமான நாற்காலிகளும் மேசைகளும் மனம் லயித்து படிக்க தூண்டுகிறது. நமக்கு பிடித்த ஒரு எழுத்தாளரின் புத்தகத்தை எடுத்து கொண்டு கண்ணாடி முகப்பு கொண்ட சுவர் அருகே, சாலையில் கீரிச்சிடும் வாகனங்களை பார்த்தபடியே படிப்பது உண்மையாகவே ஒரு சுகானுபவம். பல்வேறு வகையான புத்தகங்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் குவிந்து கிடைக்கின்றன. தூய்மையை தொடர்ந்து பேணும் ஊழியர்கள், மிகவும் அமைதியான சூழல், நவீனம் என இந்நூலகம் சென்னையின் வரபிரசாதமாக திகழ்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment